மிஸ் இந்தியா நவ்னீத் கெளர் தில்லானை துரத்திய பிச்சைக்கார சிறுமிகள்

|

சண்டிகர்: சண்டிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றவரான நவ்னீத் கெளர் தில்லானை பிச்சைக்கார சிறுமிகள் துரத்தியதால் அவர் பயந்து போய் விட்டார்.

சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் ஷூக்களின் அறிமுகத்தை தொடங்கி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.

மிஸ் இந்தியா நவ்னீத் கெளர் தில்லானை துரத்திய பிச்சைக்கார சிறுமிகள்

தில்லான் வந்ததுமே அவரை நோக்கி அங்கு நின்றிருந்த பிச்சைக்கார சிறுமிகள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். ஒரு சிறுமி தில்லானின் டிரஸ்ஸைப் பிடித்து இழுத்தார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றார் தில்லான். ஆனால் சிறுமிகள் விடவில்லை. அவரைத் துரத்தினர்.

இதைப் பார்த்த பாதுகாவலர்கள் ஓடி வந்து சிறுமிகளை விலக்கி விட்டு தில்லானை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

 

Post a Comment