நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

|

நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

மும்பை: பேஷன் ஷோவில் கலந்து கொண்ட இந்தி நடிகை கல்கி கொச்லினுக்கும், ஃபேஷன் டிசைனர்கள் ரித்தி, சித்திக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த போஷன் ஷோவில் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் ரித்தி, சித்தி ஆகிய டிசனைர்கள் வடிவமைத்தவற்றை அணிந்து ராம்ப் வாக் செய்தார். ஷோ ஸ்டாப்பரான அவர் இறுதியில் டிசைனர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு வர மறந்துவிட்டார். இதனால் கடுப்பான டிசைனர்கள் கல்கியை மனநலம் சரியில்லாதவர் என்றார்களாம்.

இது குறித்து அறிந்த கல்கி ட்விட்டரில் கூறுகையில்,

லெஹங்கா மற்றும் நகைகள் அணிந்து 4 மணிநேரம் காத்திருந்ததற்கு என்னை மனநலம் சரியில்லாதவர் என்றுள்ளார்கள். நான் ஒன்றும் ராம்ப்பை விட்டு வெளியே செல்லவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் என்னை அழைத்து மீடியாவுக்கு பேட்டி கொடுக்க சொன்னார்கள். நானும் டிசைனர்களை புகழ்ந்து பேட்டி கொடுத்தேன் என்றார்.

இது குறித்து ரித்தி, சித்தி கூறுகையில்,

கல்கியின் குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் அவரை தவறாக பேசவில்லை. ட்விட்டரில் கருத்து போடும் முன்பு தனது ஏஜெண்ட் மூலம் அது உண்மையா என்று எங்களிடம் கேட்டிருக்கலாம் என்றனர்.

 

Post a Comment