சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர், நடிகையர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு காமெடி நடிகர் விவேக் நகைச்சுவை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
தியாகராஜ பாகவதர் கெட்டப்பில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என பாடியபடி காமெடி நடிகர் விவேக் மேடையில் தோன்றியதும் களை கட்டியது.
நகைச்சுவை நடிகர் செல் முருகன் தியாகராஜ பாகவதராக வந்த விவேக்கிடம் பேட்டி எடுத்தார்.
நான்தான் கதாநாயகன்
கேள்வி:- எதற்கு வந்தீர்கள்?
பதில்:- சினிமா நூற்றாண்டு வைபவத்தை பார்க்க வந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது.
கே:- அனுஷ்கா, அமலாபால் அப்பா வேடத்திலா?
ப:- கிராதகா நான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்.
கே:- நாயகனாக நடிக்க சிக்ஸ்பேக், பிக்கெப் எல்லாம் வேண்டுமே?
சூர்யா - ஆர்யா
ப:- சிக்ஸ்பேக்குக்கு சூர்யா இருக்காரே பிக்கெப்புக்கு ஆர்யா இருக்காரே.
கே:- நாயகனாக நடிக்க பைக் வீலிங் சாகசம் தெரியனுமே
ப:- பைக் சாகசம் 'தல'க்கு மட்டும்தான் சரியா இருக்கும்.
அனிருத் கொலை வெறி
புதியவர்கள் பிரமாதமாக நடிக்கிறாங்க அனிருத்னு ஒரு இசை அமைப்பாளர். பேன்ட் சட்டை சேர்த்து உடம்பின் மொத்த எடையே 3 கிலோதான் இருக்கும். கொலை வெறி பாட்டு போட்டு கலக்குகிறார்.
பிரியாமணியை பிடிக்கும்
கே:- கவுண்டமணி பிடிக்குமா போண்டோ மணி பிடிக்குமா?.
ப:- பிரியாமணியை பிடிக்கும்.
பஞ்ச் வசனம்
கே:- பஞ்ச் வசனம் தெரியுமா?
ப:- அமெரிக்காவுக்கு ஒபாமா, நமக்கு நம்ம அம்மா.
இயக்குநர்கள் நாடகம்
டைரக்டர்கள் மனோஜ் குமார், ரவிமரியா இருவரும் மேடையில் நடத்திய சூட்டிங் பற்றிய நாடகம் கரகோஷம் எழுப்ப வைத்தது.
ஸ்டண்ட் நடிகர்கள் அசத்தல்
ஸ்டண்ட் நடிகர்கள் உடம்பில் ஒளிரும் அலங்கார மின் விளக்குகள் பொருத்தி இருட்டுக்குள் மயிர் கூச்செரியும் சண்டை காட்சிகளை நடத்தி பிரமிக்க வைத்தனர்.
Post a Comment