சென்னை: ஆந்திரா பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த அத்தரின்டிக்கி தாரெடி திரைக்கு வரும் முன்னரே படத்தின் பெரும்பகுதி இணையத்தில் வெளியானதில் அப்படத்தின் கதாநாயகி சமந்தா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘அத்தரின்டிக்கி தாரெடி'. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்' படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து ‘அத்தரின்டிக்கி தாரெடி' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள்.
ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் தெலுங்கானா பிரச்சினையால் காலதாமதம் ஆனது. தசரா விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், 90 நிமிடஅளவுக்கு படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதிப் படம் வெளியாகி விட்டது.
இந்நிலையில், அப்படத்தின் நாயகியான சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அத்தரின்டிக்கி தாரெடி' படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். நல்ல படங்களுக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும். இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்' எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment