நலமாக உள்ளேன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: விஷால் அவசர அறிக்கை

|

நலமாக உள்ளேன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: விஷால் அவசர அறிக்கை

சென்னை: தான் நலமுடன் இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு திடீர் என்று ரத்த அழுத்தம் குறைந்ததையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என்னுடைய தயாரிப்பில் நான் ஹீரோவாக நடித்து வரும் ‘பாண்டியநாடு' படத்துக்காக கடந்த 10 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதேபோல், நாளை ரிலீஸாக உள்ள ‘மதகஜராஜா' படத்துக்காகவும், புரமோஷன் வேலைகளுக்காக பல்வேறு மீடியாக்களுக்கு சென்று வந்தேன்.

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு என் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. ஆகையால் உடல் பரிசோதனைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கு முழுமையான ஓய்வு தேவை என்று சொன்னார்கள். அவர்கள் அறிவுரைப்படி தற்போது நான் முழு ஓய்வில் இருக்கிறேன். மற்றபடி என் உடம்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment