சென்னை: ஏற்கனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு பெயராக வைக்கும் டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது, பிற படங்களில் பேசப்பட்ட பிரபல வசனங்களை புதிய படங்களுக்கு பெயராகச் சூட்டி வருகின்றனர்.
அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, இங்க என்ன சொல்லுதுனா படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் ஒன்று புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.
பாபா படத்தில் ரஜினி அடிக்கடி பேசும் வார்த்தைகளான "கதம் கதம்" (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் தற்போது ஒரு புதிய படத்தின் தலைப்பாகி இருக்கிறது.
இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்க, நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார்.
பாபு.தூயவன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கையே தலைப்பாக வைத்திருக்கிறாராம்.
Post a Comment