சென்னை: டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரவணன்- செந்தில் இணை பெரிய திரையில் காமெடியன்களாக கலக்க வருகிறார்கள்.
ஆதித்யா சேனலில் வரும் டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி மிகப் பிரபலம். இதில் திண்டுக்கல் சரவணன் டாடியாகவும் செந்தில் மகனாகவும் வருவார்கள். டாடி ஏதாவது தத்துவம் அல்லது பழமொழியைச் சொல்ல, அதைக் கலாய்த்து சந்தேகம் கேட்பது மகனின் வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கு வாண்டுகள் மத்தியில் ஏக வரவேற்பு.
டாடி எனக்கு ஒரு டவுட் சரவணனும் செந்திலும் இப்போது பெரிய திரையில் வெண்ணிலா வீடு என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்கள்.
படத்தின் அறிமுக விழாவில் இருவரும் பங்கேற்றுப் பேசினர். சரவணன் பேசுகையில், "டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சி பார்த்துவிட்டு இந்த வாய்ப்பை எனக்கு இயக்குநர் வெற்றிமகாலிங்கம். என்னோடு செந்திலையும் சேர்த்தே இந்தப் படத்தில் காமெடியன்களாக அறிமுகப்படுத்தியுள்ளனர். மிக நல்ல வித்தியாசமான கதை. இதில் அவ்வப்போது நாங்களும் ஏதாவது புதிய காட்சிக்கான ஐடியா கொடுப்போம். அதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொள்வார் இயக்குநர். ஆனால் கடைசி வரை எந்த ஐடியாவையும் அவர் சேர்க்கவில்லை. தான் நினைத்ததை எடுத்து முடித்தார்," என்றார்.
Post a Comment