பழங்குடி மக்களின் சோகம் சொல்ல வரும் மலைவேந்தன்!

|

பழங்குடி மக்களின் அடிமை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்ட வருகிறது மலைவேந்தன் என்ற படம்.

ஓஎஸ்டி குரூப் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக திருசங்கர், கதாநாயகியாக புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

செங்கல் சூளையிலும், கல்குவாரியிலும், அரிசி ஆலைகளிலும் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களாகிய இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே மலைவேந்தனின் கதை.

பழங்குடி மக்களின் சோகம் சொல்ல வரும் மலைவேந்தன்!

இத்திரைப்படத்தில் அம்மக்களின் கலாச்சாரமும், பாடல்களும், அவர்களின் விழாக்களும் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தைத் தரும், என்கிறார் படத்துக்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கும் திருப்போரூர் ஜி திராவிடன்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி பச்சைமலை, கொடைக்கானல், அந்தமான் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.

இப்படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று சண்டைக் காட்சிகள் இடம்பெறுகின்றன.

டிகே உதயன் ஒளிப்பதிவு செய்ய, குமார ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தொடக்கவிழா இன்று வியாழக்கிழமை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

 

Post a Comment