நடிகையை ஏமாற்றிய டைரக்டர்... ஆபாசமாக படமெடுத்ததாக குற்றச்சாட்டு

|

ஜோ சாயலில் இயற்கையான அழகோடு, செயற்கையாகவே அவரைப் போலவே துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அவர். அறிமுகமானது விரல் வித்தை நடிகருடன். தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் அமையவில்லை.

இதனால் தெலுங்குப்பக்கம் சாய்ந்தார் நடிகை. சில ஐயிட்டம் சாங் மூலம் பிரபலமான இவர் தற்போது, தெலுங்கு படவுலகம் பற்றி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாராம். அதாகப்பட்டது, தன் சினிமா வாழ்க்கையில் பலர் தன்னை ஏமாற்றியதாகவும், சில டைரக்டர்கள் தன்னிடம் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தெலுங்உப் படமொன்றில் நடித்த போது தனக்கு தெரியாமலேயே டைரக்டர் தன்னை ஆபாசமாக படமெடுத்ததாகவும், படத்தில் அக்காட்சிகளைப் பார்த்து தான் கதறிக் கதறி அழுததாகவும் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் நடிகை.

 

Post a Comment