ஏற்கனவே, யோக நேரமாக இருப்பதால் தான் ஒருபடம் வெளிவந்த நிலையிலேயே பல முண்ணனி நடிகளுக்கு போட்டி நாயகி ஆகிவிட்டார் அம்மணி.
இந்நிலையில், தனக்கு பாடும் ஆசை இருப்பதாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் தெரிவித்துள்ளாராம் நடிகை. பாடகியின் இனிமையான குரலும், கிளிப்பேச்சும் கேட்டு ஏற்கனவே மயங்கிப் போயிருக்கும் ரசிகர்கள் விரைவில் நடிகையின் குயிலோசை பாடலையும் கேட்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
கொலைவெறி நாயகன் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடி வரும் சூழ்நிலையில், அவருடன் உடன் நடித்த நாயகியும் தற்போது பாட்டுப்பாட ஆசை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ( முன்னாடியே சொல்லிருந்தாவது ஒரு டூயட் சாங் ரெடி பண்ணிருப்பாங்க...)
புதிய பாடகர்களை அறிமுகப் படுத்துவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இன்சியல் இசையமைப்பாளர் காதுக்கும் இந்தத் தகவல் போகாமலா இருக்கும்.
Post a Comment