ஏற்கெனவே மூன்று படங்கள் தீபாவளிக்கு வரிசை கட்டி நின்றபடி 900 தியேட்டர்களைக் கேட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாக களமிறங்கியிருக்கிறது விஷாலின் பாண்டிய நாடு.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாராகும் முதல் படம் இது. சுசீந்திரன் இயக்க, டி இமான் இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக விஷாலும் லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்தப் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக களமிறக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் விஷால்.
மதகஜராஜா திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இந்தப் படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடவிருந்தார் விஷால். ஆனால் மதகஜராஜாவுக்கு சிக்கல் இன்னும் தீராததால், தீபாவளிக்கு பாண்டிய நாடு படத்தை வெளியிடலாம் என களமிறங்கியுள்ளார்.
ஏற்கெனவே ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன. இந்தப் படங்களுக்கு 900 தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 700 அரங்குகள்தான் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் விஷால் படமும் வந்தால் எப்படித் தியேட்டர்களை ஒதுக்குவது என திணறிப் போயுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.
Post a Comment