மாப்பிள்ளைக்கு எப்படி விருது கொடுக்கலாம்?: ட்விட்டரில் கொந்தளித்த லீடரின் ரசிகர்கள்

|

சென்னை: அண்மையில் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது தங்கள் லீடர் நடிகருக்குத் தான் கிடைத்திருக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் துபாயில் நடந்தது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் ஆன்லைனில் ரசிகர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு ஆன்லைனில் வாக்களித்தனர்.

அப்படி வாக்களித்ததில் லீடர் நடிகருக்கு 90 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும், மாப்பிள்ளை நடிகருக்கு வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 90 சதவீத வாக்குகள் பெற்ற லீடருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்காமல் மாப்பிள்ளைக்கு எப்படி கொடுக்கலாம், அப்படி என்றால் இந்த வாக்கெடுப்பு போலி என்று லீடரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர்.

மேலும் மாப்பிள்ளைக்கு இப்படித் தான் ஒவ்வொறு முறையும் விருது கிடைக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Post a Comment