வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

|

புதுச்சேரி: சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்துக்கு 2012-ம் ஆண்டிற்கான புதுவை அரசின் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்படுகிறது,

நாளை புதுவையில் நடக்கும் விழாவில் வெள்ளி நினைவுப் பரிசும் ரூ 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், புதுவை மாநில அரசும், அல்லயன்ஸ் பிரான்சேஸும் இணைந்து நடத்தும் இந்தியத் திரைப்பட விழா 2013 நாளை புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடக்கிறது.

முருகா திரையரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் என் ரங்கசாமி தலைமை ஏற்றுத் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்துக்குத்து தரப்படுகிறது.

வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

ஒரு வெள்ளி நினைவுப் பரிசும், ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசும் இந்தப் படத்துக்கு தரப்படுகிறது. விழாவில் இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு விருதினைப் பெறுகிறார்.

ஏற்கெனவே மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகளை வாகை சூட வா வென்றுள்ளது.

 

Post a Comment