தாய்க்கு செய்து கொடுத்த 'அந்த' சத்தியத்தை நடிகர் மறந்துவிட்டாரோ?

|

சென்னை: இரட்டை அர்த்த வசனங்களை இனி பேச மாட்டேன் என்று தனது தாய்க்கு சர்ச்சையில் சிக்கியுள்ள காமெடி நடிகர் சத்தியம் செய்து கொடித்திருந்தார்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் பெரிய அளவில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் அவர். காமெடி செய்து சம்பாதித்த பணத்தில் அவர் தளபதி வைத்திருக்கும் அதே பிராண்ட் காருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இரட்டை அர்த்த வசனங்களை பேசி பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் அமைப்பு ஒன்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சர்ச்சை எல்லாம் வெடிப்பதற்கு முன்பு தாய் சொல்லை தட்டாதவர் என்று கூறப்படும் அந்த நடிகர் தனது அம்மாவுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

அதாவது இனி வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அருவெறுப்பான வசனங்களை பேச மாட்டேன் என்று. அந்த சத்தியத்தை ஒரு வேளை மறந்துவிட்டாரோ?

 

Post a Comment