நம்பர் நடிகைக்கு படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். வயது கூடிக் கொண்டே செல்கின்ற போதும், அவரை விட இளமையான நடிகைகள் பலர் அறிமுகம் ஆன போதும் வயது வித்தியாசமின்றி இளவயது நடிகர்கள் முதல் வயதான நடிகர் வரை அனைவரது சாய்ஸ்சும் அம்மணி தானாம்.
சொந்த வாழ்க்கையில் காதல், திருமண ஆசை என அடிக்கடி காயம் பட்ட நடிகை இனி, தன் முழு கவனமும் நடிப்பின் மீது தான் என தீர்மானித்து விட்டாராம். பழைய சர்ச்சைகளை எல்லாம் மறக்க கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்த முடிவெடுத்துள்ளாராம் நடிகை.
தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழி பட உலகிலும் அம்மணி தான் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார். அதனால் தனது குடும்ப வாழ்க்கை ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டாராம் இந்த ராணி.
நடிகையின் முடிவைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் எண்ண முடியாத காசோலைகளோடு அம்மணியின் வீட்டு வாசலில் தவமிருக்கிறார்களாம் கால்ஷீட்டுக்காக.
Post a Comment