சென்னை: நடிகர் சூர்யா நகைக் கடை ஒன்றை திறந்து வைக்க சிங்கப்பூர் சென்றுள்ளார்.
நடிகர் சூர்யா பிரபல நகைக் கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அந்த நகைக் கடை தனது கிளையை சிங்கப்பூரில் திறக்கிறது. இந்த பிரமாண்ட கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சூர்யா சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அவர் தான் கடையை திறந்து வைக்கிறார். சூர்யா கௌதம் மேனன் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதையடுத்து அவர் லிங்குசாமியின் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் உலகிலேயே முதன் முறையாக ரெட் டிராகன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இப்படத்தில் சூர்யாவுடன் முதன் முறையாக சமந்தா ஜோடி சேர்கிறார். படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
Post a Comment