ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்!

|

ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்!

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்.

தலைவா படப் பிரச்சினைக்குப் பிறகு விஜய்யின் இமேஜ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலைக் குறிவைத்து இயங்கிய அவருக்கும் அவரது மக்கள் இயக்கத்துக்கும் இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பிறந்த நாள் மற்றும் ரசிகர் மன்ற விழாவை நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி. போட்ட பந்தல் பிரிக்கப்பட்டது. அடுத்து தலைவா படத்தையே வெளியிட முடியவில்லை.

இந்த அளவு வெளிப்படையாக சிக்கலில் சிக்கினாலும், எதையும் செய்ய முடியாமல், சினிமா நூற்றாண்டுவிழாவுக்குப் போய் முதல்வரைப் புகழ்ந்துவிட்டு வந்தார் விஜய்.

இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரைச் சந்திக்க நேரம் கேட்டு நச்சரித்தார்களாம்.

தமிழகத்தில் அந்தச் சந்திப்பை நடத்தினால் சிக்கல் என்று நினைத்த விஜய், முதலில் தனது ஜில்லா பட ஷூட்டிங்கை ஆந்திராவுக்கு மாற்றியவர், அங்கு வைத்து சில நிர்வாகிகளை மட்டும் வரவழைத்து ஆலோசனை நடத்தினாராம்.

இந்த நிலை நீடித்தால் நம்மை கேலிப் பொருளாக்கிவிடுவார்கள்.. ஏதாவது செய்தாக வேண்டும் என மன்ற நிர்வாகிகள் கூற, நிச்சயம் செய்யத்தான் வேண்டும் என்று ஆமோதித்தாராம் விஜய்.

என்ன செய்யப் போகிறார்?

 

+ comments + 3 comments

Anonymous
21 October 2013 at 03:21

It is a rumour
vijay will never enter politics
he has very high demand in tamil film industry earning crores
he will not enter for anotherr 10 years is sure

Anonymous
21 October 2013 at 03:29

There is a strong RUMOUR spreading in online medium that, #Vijay recently had a private meeting with his fan club and decided to start a political PRIVATE party to stand in the upcoming election.This is 100% RUMOUR.

Kindly ignore it!

Anonymous
21 October 2013 at 03:30

This is a strong RUMOUR that #Vijay recently had a private meeting with his fan club and decided to start a political PRIVATE party to stand in the upcoming election.This is 100% RUMOUR. and against interest of vijay. Media please publish only true news

Kindly ignore it!

Post a Comment