சென்னை: நயனமான நடிகை தொப்புள் நடிகையை விளாசியுள்ளார்.
கேரளாவில் இருந்து வந்த நடிகை தொப்புள் விவகாரத்தை பெரிதாக்குவதற்கு முன்பு கோலிவுட் விரும்பும் நாயகியாக இருந்தார். இது பல முன்னணி நடிகைகளுக்கு காதில் புகையை வரவழைத்தது.
வந்த வேகத்தில் இந்த நடிகைக்கு இத்தனை பட வாய்ப்புகளா என்று வெம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த நடிகை ஒரு படத்தில் எடுக்கப்பட்ட தொப்புள் காட்சியை பெரிய பிரச்சனையாக்கி இறுதியில் நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என்று கூறி புஸ்ஸாக்கிவிட்டார். இதை பார்த்த கோடம்பாக்கத்தினர் படத்திற்கு இப்படி எல்லாமா பப்ளிசிட்டி தேடுவது என்று தலையில் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அந்த நாயகியை ஒப்பந்தம் செய்ய ஆளாளுக்கு அஞ்சுகிறார்களாம்.
இந்நிலையில் இது பற்றி நயனமான நடிகையிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
சினிமாவின் ஒரு அங்கம் கவர்ச்சி. தற்போது ஹீரோயின்களை அயிட்டம் நடிகைகள் போன்று பயன்படுத்துகிறார்கள். இது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்த பிறகு தொப்புளை காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேன் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
தொப்புள் நடிகையை சின்ன நயனம் என்றெல்லாம் வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
Nayan sariyaaga solli irukkiraar... Thoppul kaatta mudiyaadhendraal malayalam thaandi engum pogadheergal..
Post a Comment