இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்?- ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்

|

சென்னை: செல்வராகவனின் இரண்டம் உலகம் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் திடீரென விலகிக் கொண்டார். படத்தின் பின்னணி இசையை இப்போது அனிருத் அமைக்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்?- ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்

செல்வராகவனுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த முதல் படம் இது. படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ்தான் இசையமைத்தார். சமீபத்தில் பாடல்களும் வெளியாகின.

இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது தீபாவளிக்கு படத்தை வெளியிட முயற்சி செய்து வரும் செல்வராகவன், படத்தின் பின்னணி இசையை முடித்துத் தர ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்டு வந்தார்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலையில், பின்னணி இசையை மட்டும் வேறொரு இசையமைப்பாளரை வைத்து முடிக்க எண்ணிய செல்வராகவன், அனிருத்தை அணுகினார். இப்போது அனிருத்தான் பின்னணி இசை கோர்த்து வருகிறார் இரண்டாம் உலகத்துக்கு.

இந்நிலையில், செல்வராகவன் படத்தில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், "ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளதால், அவற்றிற்கான வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடி காரணமாக இரண்டாம் உலகம் பின்னணி இசைச் சேர்ப்பை செய்ய முடியாத நிலை. எனவே விலகிக் கொண்டேன். வேறு காரணம் எதுவுமில்லை," என்று கூறியுள்ளார்.

 

Post a Comment