தேவதை சீரியலின் தேவதை சுபத்ரா. சீரியலில் கதைப்படி திருமணம் ஆகாமல் வரன் தட்டிக் கொண்டே போகும் கதாபாத்திரம் இவருக்கு ஆனால் நிஜத்தில் ப்ளஸ் டூ முடிக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டதாம்.
பள்ளி படிக்கும் காலத்திலேயே நூறு பேர்வரை காதலை சொல்லியிருக்கிறார்களாம். எதற்கும் ஓகே சொல்லாமல் கடைசியில் சொந்த மாமாவிற்கு ஓகே சொல்லி திருமணம் முடித்திருக்கிறார்.
கணவரை செல்லமாக அழைப்பது மாம்ஸ். திருமணத்திற்கு பின்பே சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பு, சீரியல் என நடித்து வருகிறார் அழகான சுபத்ரா.
60 கதாநாயகிகள்
தேவதை சீரியலுக்கா 60 பேரை டெஸ்ட் செய்து கடைசியில் 61வது நபராக தேர்வானராம் சுபத்ரா.
ஒன் சைடு லவ்
16 ப்ளஸ் களிலேயே 100 பேர் வரை காதலை சொல்லியிருக்கின்றனர். எல்லாமே ஒன் சைடு லவ்வாம்.
காதல் சொன்ன மாமா
கடைசியில் சொந்த மாமாவே ஒரு திருமண விழாவில் காதலை சொல்லி கடைசியில் அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.
அழகு பராமரிப்பு
சுபத்ரா தனது அழகை பராமரிக்க தக்காளி, எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக் கருவை பூசி முகம் கழுவுகிறாராம். இதனால் முகம் பளிச் பளிச்தான் என்கிறார்.
தேவதை போல ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் சுபத்ரா சொல்வதை கேட்டுக்கங்களேன்.
Post a Comment