சென்னை: நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்ரையில் சுற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலர்கள் என்று பல காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ நாங்கள் வெறும் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே திரிஷாவின் அம்மா தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் துபாயில் நடந்த சிமா விருது விழாவில் திரிஷாவும், ராணாவும் ஓவர் நெருக்கமாக இருந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வந்தன. இந்நிலையில் திரிஷாவும், ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து நடந்த சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
மேலும் ஹோட்டல் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பிறகு ராணா திரிஷாவை பத்திரிமாக அழைத்துச் செல்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Post a Comment