சந்தானத்தைக் கைவிட்ட சிம்பு!

|

சந்தானத்துக்கு சினிமாவில் முக்கியத்துவம் கிடைக்கக் காரணமானவர்களில் ஒருவரான சிம்பு, தன் அடுத்த படத்தில் அவரைக் கழட்டிவிட்டது சந்தானத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதற்கும் முன்பே சிம்பு முதல் முதலாக ஹீரோவாக நடித்த காதல் அழிவதில்லை படத்திலிருந்தே சிம்புவுடன் தொடர்ந்து சந்தானம் நடித்து வருகிறார். சிம்புவின் மன்மதன் படம் மூலம்தான் சந்தானத்துக்கு பெரிய திரையில் பெரிய பிரேக் கிடைத்தது.

சந்தானத்தைக் கைவிட்ட சிம்பு!

ஆனால் இப்போது பாண்டிராஜ் சிம்புவை இயக்கும் படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்கு பதில் சூரி நடித்திருக்கிறார்.

சந்தானம் காமெடி செய்த படங்கள்அடுத்தடுத்து சறுக்கிக் கொண்டதும், தொடர்ந்து இரட்டை அர்த்த வசனங்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளால் அவர் பெற்று வரும் கண்டனங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

இதையெல்லாம் கவனித்த சந்தானம், சிம்புவிடமே நேரடியாக 'ஏன் நண்பா, ஏன்?' என கேட்க, இது என் முடிவல்ல என இயக்குநரைக் கைகாட்டிவிட்டு நழுவினாராம் சிம்பு.

 

Post a Comment