’நாதஸ்வரம்’ கோபி அலுவலகத்தில் பணம் திருட்டு... போலீஸ் விசாரணை

|

சென்னை: நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரின் இயக்குனர் திருமுருகனின் வளரசவாக்கத்தில் உள்ள அலுவல கத்தில் இருந்து 30,000 ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டிஒலி' என்ற சீரியலை இயக்கி நடித்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திருமுருகன். இவர், எம்-மகன், முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது நாதஸ்வரம் என்ற சீரியலை இயக்கி அதில் நடித்தும் வருகிறார்.

’நாதஸ்வரம்’ கோபி அலுவலகத்தில் பணம் திருட்டு... போலீஸ் விசாரணை

இவரது அலுவலகம் வளசரவாக்கம், பிரகாசம் சாலை, ஜானகி நகரில் உள்ளது. இந்த அலுவலகம் மேலாளர் செல்வக்குமார் என்பவரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மதியம் அலுவலகத்தை மூடிவிட்டு அனைவரும் சாப்பிட சென்று விட்டனர். 1 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த ரூ.30ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலாளர் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டுள்ளனர்.

 

Post a Comment