மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீடு மற்றும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது பாந்த்ரா அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் தாக்கினார்.
இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து ஸ்ருதி நேற்று போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் ஸ்ருதியின் பாந்த்ரா அடுக்கு மாடிக் குடியிருப்பில் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் காவலாளிகள் இருவரையும் நியமித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
மேலும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் செக்யூரிட்டிகள் உடன் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்யும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஸ்ருதி தரப்பில் மனு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment