மும்பை: சுயசரிதை எழுதும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
பல பிரபலங்கள் சுயசரிதை எழுதுகிறார்கள். நீங்கள் எப்பொழுது எழுதுவீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில்,
சுயசரிதை எழுதும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. கடந்த 7 நிமிடங்கள் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்து எழுதுவது மிகப் பெரிய வேலை என்றார்.
Post a Comment