செக்சுக்கு பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம்!- ஓரினச்சேர்க்கை குறித்து த்ரிஷா

|

சென்னை: ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்க கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு கிளப்பி வருகிறார்கள்.

செக்சுக்கு பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம்!- ஓரினச்சேர்க்கை குறித்து த்ரிஷா

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா.. அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஓரினச் சேர்க்கை பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, ஆதரவாகப் பேசி வருகிறார்கள்.

இப்போது த்ரிஷா வாய் திறந்துள்ளார். அவரது கருத்து இது:

‘‘இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம். ‘செக்ஸ்,' அவரவர் விருப்பம். இவரோடுதான் ‘செக்ஸ்' வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

‘செக்ஸ்' விஷயத்தில், பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவரவர் இஷ்டம். இவர்தான் ‘பார்ட்னர்' என்று மற்றவர்கள் பலவந்தப்படுத்த கூடாது!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment