ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

|

விஜய் சேதுபதிதான் கடந்த இரு ஆண்டுகளாக கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார்.

இந்த இரு ஆண்டுகளிலும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி மட்டும்தான்.

இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு ஹீரோவுக்கு பெரிய சவால்.

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

அந்த சவாலை இதுவரை தனியாகச் சமாளித்து வந்த விஜய் சேதுபதி, இப்போது ஒரு புதிய செட்டப்பை உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவரை படங்களுக்கு தான் மட்டும் நகதை கேட்டு, தேர்வு செய்து நடித்து வந்தவர், இனி கதை கேட்பதற்கென்றே ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த ஐந்து பேருடன் சேர்ந்து கதை கேட்கும் விஜய் சேதுபதி, கதை சொன்னவர் போன பிறகு, தன் குழுவினர் கருத்தையெல்லாம் கேட்ட பிறகே கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

'சங்குதேவன்' 'வன்மம்', சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், புறம்போக்கு" போன்ற படங்களில் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

2015-க்குப் பிறகு தான் நடிக்கப் போகும் படங்களுக்கு கதை கேட்கத்தான் இந்த புதிய 'நிபுணர் குழு'வை நியமித்திருக்கிறார்!!

 

Post a Comment