சத்யமேவ ஜெயதே.. ஏராளமான பாராட்டுகளையும் அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்த தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி இது. 2012-ல் ஆமீர் கான் இதனை நடத்தினார்.
ஒரு ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொடர்கிறார் ஆமீர். இந்த முறை முற்றிலும் புதிய வடிவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, ஸ்டார் ப்ளஸ்ஸில்.
முந்தைய நிகழ்ச்சியில் பெண் சிசுக் கொலை, சாதிக் கொடுமைகள், குழந்தை வதை, குடும்ப வன்முறை போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அதிரவைக்கும் பல உண்மைகளை மக்களிடம் கொண்டு போனார் ஆமீர் கான்.
இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்புக்கு நிகராக விமர்சனங்களும் கிளம்பின. குறிப்பாக சாதிய கொடுமைகள் குறித்த நிகழ்ச்சியில், அந்த கொடுமைகள் ஒழிக்கப்பட்டதில் அண்ணல் அம்பேத்கர் பங்கு குறித்து எதையுமே ஆமீர் சொல்லவில்லை என்று கூறப்பட்டது.
மேலும் தலித் மக்களின் மீதான் கொடுமைகளை, ஒரு பிராமணரின் பார்வையிலிருந்து அவர் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இப்போது இரண்டாவது சீஸனை வரும் மார்ச் 2ம் தேதி ஆரம்பிக்கிறார் ஆமீர் கான்.
ஒவ்வொரு சமூகப் பிரச்சினை தொடர்பான விவாதத்தையும் நான்கு எபிசோடுகளாக பிரித்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ யுட்யூபில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Post a Comment