ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கல் சீஸனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதில் அரசுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
ஜில்லா, வீரம் வசூல் குறித்து ஆளுக்கு ஒரு தகவலைப் பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆனால் இதுவரை இரு படங்களும் ரூ 30 கோடிக்கு மேல் தியேட்டர் வசூலாகவே சம்பாதித்துள்ளதாக அரசுக்கு காட்டியுள்ளனர். தியேட்டர்காரர்களே ப்ளாக்கில் விற்கும் டிக்கெட் விலையை கணக்கில் கொண்டால் இந்த வசூல் இன்னும் அதிகமாக இருக்கும்.
ஆனால் டிக்கெட் விலைப்படி இந்தக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்குமே வரிவிலக்கு இல்லாததால், ரூ 6 கோடி வரை அரசுக்கு லாபமாகவே கிடைத்துள்ளது. அதாவது பெருநகரப் பகுதி அரங்குகளுக்கு 20 சதவீதமும், கிராமம் சார்ந்த பகுதிகளுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கிறது அரசு.
ஜில்லாவும் வீரமும் 70 கோடி, 80 கோடி வசூலித்துவிட்டதாக படத் தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த வசூல் கணக்கை உண்மையாகவே அரசுக்கு இவர்கள் சமர்ப்பித்தால்.. மக்களுக்குத்தானே லாபம்? செய்வார்களா?
+ comments + 1 comments
VEERAM OVERTAKES JILLA LAE
Post a Comment