சென்னை: விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார்.
ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.
படத்தின் ரிசல்ட் குறித்து ஆர்பி சவுத்ரி கூறுகையில், "படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே மிகப் பெரிய ஆரம்ப வசூல் ஜில்லாவுக்குக் கிடைத்துள்ளது என்னை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜில்லா மட்டுமல்ல, உடன் வெளியான அஜீத்தின் படமும் வெற்றியடைந்துள்ளது ஒரு தயாரிப்பாளராக என்னை சந்தோஷப்பட வைத்துள்ளது.
ஆரம்ப காலங்களில் தியேட்டர் விசிட் போவேன். பின்னர் போவதை விட்டுவிட்டேன். ஆனால் 85 படம் எடுத்த பிறகு இப்போது இந்தப் படத்துக்கு ரசிகர்கள் செய்திருந்த ஏற்பாடுகளுக்காக போயிருந்தேன்.
அதிகாலையிலேயே அவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தனர். அந்த காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கும் போவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல... கேரளாவில் நேரடி மலையாளப் படங்களை மிஞ்சும் அளவுக்கு நேற்று வசூல். எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்," என்றார்.
+ comments + 2 comments
Even RB Chowdary had to some to media for the first time (may be) to save Jilla and tell something that his film is doing well, since he is afraid of negative talks on Jilla and Veeram is taking over the public WOM. Cutting 10 minutes proved the fear in them and will not save the film, otherwise many films would have become hit earlier cutting unnecessary portions after release. Media is only overhyping this story just to save Vijay and the producer, instead saying Veeram has got potential to make it bigger to become BB/SH/HIT and Jilla falls after opening...
sti muru sati... stop crying
Post a Comment