இந்தூர்: சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை புரிந்தார் இந்தி நடிகர் சல்மான் கான். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டில் நல்ல பணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதாரணமாக மத்திய பிரதேச மாநில முதல்வர் நல்ல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எனவே அவரது கட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்" எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment