கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மடிப்பாக்கம் மாதவன்' நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது.
வெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர்.
இம் மூவரும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டார்கள் என்பது அடுத்தடுத்த காமெடி.
ராம்ஜி, நளினி, மதுமிதா ஆகியோரின் கலக்கல் காமெடி, சிரிப்பில் வீடுகளை குலுக்குகிறது. இவர்களுடன் காத்தாடி ராமமூர்த்தி, சாந்தி ஆனந்தராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீஜீத், முல்லை, டெலிபோன் மணி, மங்கீ ரவி, சிவராஜ், ஸ்ரீமதி அம்மாள், கலாதர், ரங்கம்மா பாட்டி, கண்ணாயிரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை திரைக்கதை தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட். இயக்கம்: எஸ்.மோகன். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.
Post a Comment