வீடு, மறுபடியும் படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன! - பாலு மகேந்திரா

|

சென்னை: எனது மறுபடியும், வீடு போன்ற படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன. இன்னும் பல படங்களுக்கும் இதே நிலைதான். எனவே படங்களின் நெகடிவ்களைப் பாதுகாக்க ஆவணக் காப்பகம் தொடங்க வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கேட்டுக் கொண்டார்.

வி 4 விருது வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், "இந்த விழாவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் கவுரவிக்கப்பட்டார். சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் பாதுகாத்து வைத்திருப்பவர் அவர். இன்றும் அதைத் தொடர்கிறார்.

வீடு, மறுபடியும் படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன! - பாலு மகேந்திரா

ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட பல படங்களின் நெகடிவ்கள் இன்றைக்கு அழிந்துவிட்டன.

நான் உருவாக்கிய மறுபக்கம், வீடு உள்ளிட்ட பல படங்களின் நெகடிவ் அழிந்துவிட்டன. என்னுடைய படங்கள் மட்டுமல்ல பாதுகாக்கப்படாத பல படங்கள் அழிந்துவிட்டது. டிஜிட்டல் முறை வந்துவிட்டதால் இனி வரும் காலங்களில் நெகடிவில் படம் தயாரிக்க வேண்டிய தேவை இருக்காது.

ஏற்கனவே தயாராகி நெகடிவ் வடிவில் இருக்கும் படங்களை பாதுகாப்பதில் தயாரிப்பாளர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இந்தநிலை நீடித்தால் ஏராளமான படங்கள் அழிந்துபோய்விடும். எனவே நெகடிவ்களை பாதுகாக்க ஆவண காப்பகம் ஒன்றை தொடங்க வேண்டும்," என்றார்.

 

Post a Comment