சென்னை: மீன் பெயரில் வரும் படத்தில் அறிமுகமாகும் நடிகை புதுசு எல்லாம் கிடையாது அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்தவர் என்று போட்டுக் கொடுத்து வருகிறாராம் ஊதா கலரு ரிப்பன்.
இளைய திலகத்தின் மகனை வைத்து யானை பெயரில் படம் எடுத்த அந்த இயக்குனர் தற்போது மீனை குறிக்கும் 3 எழுத்தில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சந்தோஷம் என்பதை குறிக்கும் பெயர் கொண்ட 4 எழுத்து நடிகையை அவர் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். இந்த நடிகையை நானே தேடிப் பிடித்து நடிக்க அழைத்து வந்தேன். அவர் சினிமாவுக்கு புதுசு என்றார் இயக்குனர்.
இந்நிலையில் ஊதா கலரு ரிப்பனோ பார்ப்பவர்களிடம் எல்லாம் அந்த நடிகையைப் பற்றி வேறு விதமாக கூறி வருகிறார். அந்த நடிகை ஒன்றும் இயக்குனர் கூறுவது போன்று புதுசு எல்லாம் கிடையாது. அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் தான் என்று கூறுகிறார் ஊதா கலரு ரிப்பன்.
தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான போட்டியும், பொறாமையும் தான் ஊதா கலரு ரிப்பன் இப்படி கூறி வருவதற்கு காரணமாம். எங்கே தமிழில் தன்னை விட அவர் பெரிய நடிகையாகிவிடுவாரோ என்ற பயமும் ஒரு காரணமாம்.
Post a Comment