பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

|

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

சென்னை: எனக்கு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி என்று பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வென்றவர்களில் பலர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், குறிப்பாக தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல், வைரமுத்து, விநாயக்ராம் போன்றோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள சந்தோஷ் சிவன், "பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு எனது நன்றி. என்னை இந்த விருதிற்காக பரிந்துரை செய்த பூனேவிலிருக்கும் திரைப்படக் கல்லூரிக்கு என் நன்றிகள்," என்று கூறியுள்ளார்.

 

Post a Comment