சென்னை: பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நயனும், சிம்புவும் சிரித்துப் பேசிக் கொண்டார்களாம். அவர்கள் பழகும் விதத்தை பார்த்து படக்குழுவினர் அவர்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வருகிறார்களாம்.
இந்நிலையில் சிம்புவும், நயனும் படப்பிடிப்பில் சிரித்துப் பேசும் போட்டோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே காதலா, இப்படித் தான் போட்டோவை இணையதளத்தில் போட்டு தகவல் பரப்புவதா என்று நயன் காட்டத்தில் உள்ளாராம்.
நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் சேர்ந்து பெங்களூரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment