ஜில்லா பேனர், கட் அவுட் வைக்க தடை: கவலையில் விஜய் ரசிகர்கள்

|

சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளில் விஜய்யின் ஜில்லா பட பேனர்களை வைக்க காவல் துறையினர் தடை விதித்தார்களாம். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைவா படத்தை ரிலீஸ் செய்ய தடை ஏற்பட்டு பிறகு அலைந்து திரிந்து படத்தை ஒரு வழியாக வெளியிட்டனர். தலைவா படத்தை வெளியிட தான் படாதபாடு பட்டதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் ஜில்லா எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸாக வேண்டும் என்பதில் விஜய் முனைப்பாக உள்ளார்.

ஜில்லா பேனர், கட் அவுட் வைக்க தடை: கவலையில் விஜய் ரசிகர்கள்  

இதனால் படத்தில் பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்று கூறிவிட்டார் விஜய். படமும் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்றத்தினர் சென்னை நகரில் உள்ள சில பகுதிகளில் ஜில்லா படத்தின் பிரமாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த காவல் துறையினர் கட் அவுட், பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்களாம். இதையடுத்து கொண்டு வந்த கட் அவுட் மற்றும் பேனர்களை எடுத்துச் சென்றுவிட்டார்களாம் ரசிகர்கள். ஒரு வேளை இந்த தடைக்கு பின்னால் மேலிடம் இருக்குமோ என்று விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்களாம்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க தயாரிப்பாளருக்கு தான் கலக்கமாக உள்ளதாம்.

 

Post a Comment