மறைந்த இயக்குநர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி கொடுத்த எஸ்.வி.சேகர்

|

நினைவில் நின்றவள் திரைப்படத்தின் இயக்குநர் அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.

கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். நினைவில் நின்றவள். எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள இந்த படத்தில் படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

மறைந்த இயக்குநர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி கொடுத்த எஸ்.வி.சேகர்

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் நினைவில் நின்றவள் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை,திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரருமான அகத்திய பாரதி புற்றுநோயில் மரணமடைந்துவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நின்றவள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மறைந்த அகத்திய பாரதி அவர்களின் இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக எஸ்.வி.சேகர் வழங்கினார்.

 

+ comments + 1 comments

Anonymous
7 February 2014 at 02:04

GOOD GESTURE
picture has not collected that amount even

Post a Comment