சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி, அம்மா யங் இந்தியா விருது 2014 சென்னையில் வழங்கப்பட்டது.
நடிகைகள் சதா, மனிஷா யாதவ் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சென்னை தி நகரில் உள்ள ஆந்திரா க்ளப்பில், தமிழ் நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
சதா -மனிஷா
நடிகைகள் சதா, மனிஷா யாதவ், விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோருக்கு அம்மா யங் இந்தியா விருது வழங்கப்பட்டது.
இந்த விருது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அமைந்த விருதினைப் பெருவது தங்கள் பாக்கியம் என்றும் விருது பெற்றோர் தெரிவித்தனர்.
Post a Comment