வேல் முருகன் பாடிய குடி குடி... என்ற பாடலுக்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
குரு சூர்யா மூவீஸ் தயாரிப்பில்ஆர் கே அன்பு செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் என் நெஞ்சை தொட்டாயே.
இத் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குடி குடி.... என துவங்கும் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார் .
தணிக்கை குழு அந்த பாடலில் வரும் சில வார்த்தைகளுக்கு தடை விதித்து, அதற்கு மாற்று வரியைச் சேர்க்குமாறு கூறியது.
அதன்படி மாற்று வரிகளைச் சேர்த்து தணிக்கை குழுவிடம் யு சான்று பெற்றனர். ஆனாலும் அந்தப் பாடலை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிடலாம். ஆனால் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
Post a Comment