குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

|

குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

மாணவர்கள் குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், "நான் பி.இ. எம்.பி.ஏ படித்திருந்தாலும் நடிப்புத் துறைக்கு விரும்பி வந்துள்ளேன்.

கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு பரிசுகள் வழங்கும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்கள் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு அதிகம் அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. இவற்றை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்.

இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதுபோல நீங்கள் படிப்பில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். படிப்புதான் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்," என்றார்.

 

Post a Comment