பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

|

பெங்களூர்: பாலியல் சிறுபான்மையினராகக் கருதப்படும் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்களான கே, லெஸ்பியன் போன்றவர்களுக்கான படங்கள் திரையிடப்படும் திரைப்பட விழா வரும் மார்ச் மாதம் நடக்கிறது.

இந்த மாதிரியான திரைப்பட விழாக்கள் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்தே பெங்களூரில் நடக்கிறது.

இந்த பாலியல் சிறுபான்மை திரைப்பட விழாவைப் பொறுத்தவரை இது 6-வது ஆண்டாகும்.

இந்த விழாவில் திருநங்கைகளின் சமூக படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் படங்கள் திரையிடப்படும்.

இதுகுறித்து ஸ்வாபாவா அறக்கட்டளை, குட் அஸ் யூ வாக் (கே), பைரேட் டைக்ஸ் அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அலையான்ஸ் பிராங்கைஸ் வளாகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை 6-ஆவது பாலியல் சிறுபான்மையினருக்கான திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினர் பங்கேற்று தங்களது சமூக படைப்புத் திறனை காட்சியிடுகின்றனர். இந்தத் திரைப்பட விழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

ஓரினச் சேர்க்கை, திருநங்கைகள் பற்றி சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பல படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காகவே இப்படி ஒரு திரைப்பட விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment