இந்த ஆண்டு தேசிய விருதுக்கான போட்டியில் 40 படங்கள் பங்கேற்றுள்ளன.
61 வது தேசிய விருதுக்கான அறிவிப்பு சமீபத்தில் கடந்த மாதம் அரசால் வெளியிடப்பட்டது.
மொத்தம் 30 பிரிவுகளில் இந்த விருதுகள் தரப்படுகின்றன. போட்டிக்கு படங்களை அனுப்ப கடந்த மாதம் 14-ம் தேதி கடைசி தேதியாகும்.
இந்த ஆண்டு மொத்தம் 40 படங்களை விருதுக்காக அனுப்பி வைத்துள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.
இவற்றில் 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள், விடியும் முன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்தப படங்கள் தவிர, பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை ருசித்த கோலி சோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூது கவ்வும் போன்றவையும் விருதுக்காக மோதுகின்றன.
இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் போன்ற படங்களும் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் விருதைக் குறி வைத்தே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment