மும்பை: பிரபல தமிழ் - தெலுங்கு - இந்தி நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை பூமிகா தமிழில் 'பத்ரி', 'ரோஜா கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்த பெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது'' என்றார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் சக நடிக, நடிகையர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளிவராமல் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment