ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி!

|

சென்னை: கோச்சடையான் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் விழாவாக நடத்தப் போவதாகவும், அதில் தான் நிறைய பேசப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுவதற்கு முன் பேசிய இயக்குநர் எஸ் பி முத்துராமன், நடிகர் சரத்குமார் ஆகியோர், ரசிகர்களுக்காக ஒரு மாநில மாநாட்டை ரஜினி நடத்த வேண்டும் என்றும், அதில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி!

ரஜினி பேசும் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அவர் கூறுகையில், கோச்சடையான் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும், அந்த வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் கூறினார்.

எந்திரன் படம் தொடங்கும் முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்தார். அதன் பிறகு தன் பிறந்த நாளையொட்டி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பெரிய மாநாடு போல நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அடுத்து கோச்சடையான் விழாவையே ரசிகர் மன்ற மாநாடாக நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

 

Post a Comment