விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

|

ஹைதராபாத்: விஜய் படத்திற்காக வெயிலில் காய்வதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி சமந்தா தோல் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

இந்நிலையில் தான் விஜய் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் கொளுத்தும் வெயிலில் வாடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் கடவுளை வேண்டியுள்ளார்.

சமந்தா விஜய் படம் தவிர சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

Post a Comment