ஒரு முறை கொடுத்துப் பழகிட்டா... வாங்கினவங்க அத்தனை சீக்கிரம் விடமாட்டாங்க.. என்பது தமிழ் வழக்கு.
உச்ச நடிகர் படத்தில் ஒரு முறை நஷ்டம் ஏற்பட்டு விட்டுது விநியோகஸ்தர்கள் புலம்ப, என்னால யாருக்கும் நயா பைசா நஷ்டம் வேணாம். வாங்க வந்து நஷ்ட ஈட்டை வாங்கிட்டுப் போங்க என்று கூறி பணத்தைத் திருப்பித் தந்தார்.
அதுவாவது அவர் சொந்தப் படம். பணத்தைத் திருப்பித் தந்ததில் ஏதோ ஒரு வகையில் நியாயம் இருந்தது.
ஆனால் அவர் எந்த வகையிலும் சம்பந்தப்படாத இன்னொரு படத்துக்கும் கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு உண்ணாவிரதம், போராட்டம் என ஏக அமர்க்களம் செய்தார்கள் விநியோகஸ்தர்கள்.
அவரும் சில கோடிகளைக் கொடுத்து அப்போதைக்கு அந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறினார்.
மீண்டும் இப்படியொரு சூழல் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ள உச்ச நடிகர், இந்த தனது உருவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தை நியாயமான விிலைக்கே விற்க வேண்டும் என்றும், படத்தின் விநியோகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் தன்னிடம் வரக்கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டதோடு, அதை எழுத்துப்பூர்வமாகவே எழுதிக் கொடுத்துவிட்டாராம்.
Post a Comment