ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன்! - ஜெயம் ரவி

|

சென்னை: சாக்லேட் பாய் இமேஜ் பிடிக்கவில்லை. ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன், என்றார் நடிகர் ஜெயம் ரவி.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலாபால் நடித்த படம் நிமிர்ந்து நில். இந்தப் படம் சில தடங்கள்களுக்குப் பிறகு வெளியானது. ஆனால் நல்ல பெயரையும் வசூலையும் சம்பாதித்துள்ளது.

ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன்! - ஜெயம் ரவி

இதைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை ரெசிடென்ஸி ஓட்டலில் நடந்தது.

இதில் இயக்குநர் சமுத்திரக் கனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஜெயம் ரவி பேசும்கையில், "நான் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களாக தேர்வு செய்து நடிப்பதற்கு காரணம், எனக்கு இருக்கிற சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைப்பதற்காகத்தான்.

‘பேராண்மை', ‘அமீரின் ஆதிபகவன்' ஆகிய படங்களில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் அந்தப் படங்களை ஒப்புக் கொண்டேன். நிமிர்ந்து நில் படம் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியுள்ளது.

ஆக்ஷன் படங்கள் மட்டுமில்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நடிப்பதற்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல. நல்ல கதை இருந்தால் மட்டும் போதும்," என்றார்.

 

Post a Comment