தேர்தல் அறிவிப்பு.... மே மாதத்துக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

|

சென்னை: ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் கோச்சடையான் படம் மே மாதத்துக்கு தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள சரித்திப் படம் கோச்சடையான் - தி லெஜன்ட்.

இந்தப் படம் புதிய தொழில்நுட்பத்தில் 3 டியில் தயாராகியுள்ளது. வரும் 9-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. அதற்கு முன்னோட்டமாக பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் அறிவிப்பு.... மே மாதத்துக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

கோச்சடையானின் வெளியீட்டுத் தேதி குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் படத் தயாரிப்பாளர்கள் ஈராஸ் மற்றும் இயக்குநர் சவுந்தர்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் ஏப்ரல் 11-ம் தேதி உலகம் முழுவதும் 6000 க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

சர்வதேச அளவில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையில் ஐங்கரன், ஈராஸ் நிறுவனங்கள் மும்முரம் காட்டின.

இந்த நிலையில்தான் பட வெளியீட்டுத் தேதி குறித்து இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறோம் என சவுந்தர்யா மீண்டும் ஒரு கேள்விக்குறியைப் போட்டார். அப்போதே படத்தின் வெளியீடு தள்ளிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தன.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவையில் ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்தப் பரபரப்பில் கோச்சடையானை வெளியிடலாமா.. அல்லது மே மாத மத்தியில் வெளியிடலாமா என தயாரிப்பாளர்கள் ஆலோசனையில் உள்ளனர்.

 

Post a Comment