ஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி!

|

சென்னை: வரும் ஏப்ரல் 14 அன்று ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பாகிறது.

கோச்சடையான் படம் மற்றும் தனது மறக்க முடியாத சினிமா அனுபவங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் ரஜினி.

பொதுவாக எந்த டிவி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காதவர் ரஜினி. ஒருவருக்குக் கொடுத்தால், அடுத்தவர் மனசு குறைபடுமே என்பதற்காக, தான் சொல்ல நினைப்பதை விழா மேடைகளில் வைத்துப் பேசிவிடுவார்.

ஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி!

ஆனால் நீண்ட நாட்கள் கழித்து ஜெயா டிவிக்கு சிறப்புப் பேட்டி அளிக்கிறார் ரஜினி. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கோச்சடையான் வெளியாகும் நேரம் என்பதால் அந்தப் படத்தை வரவேற்க ரசிகர்களைத் தயார்ப்படுத்த அவர் இந்தப் பேட்டியை அளித்திருப்பதாக சொல்லப்பட்டாலும், ரஜினி அதைத் தாண்டி பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாராம்.

இன்னொரு பக்கம், இந்தப் பேட்டி ஆளும்கட்சிக்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. 24-ம் தேதி தேர்தல். அதற்கு பத்து தினங்களுக்கு முன் ஆளும் கட்சி டிவிக்கு ரஜினியின் சிறப்புப் பேட்டி. இதை வைத்து பலவிதமாக எழுதவும் ஆரம்பித்துவிட்டனர்.

செய்திகள், விமர்சனங்களைத் தாண்டி, ஒவ்வொரு ரசிகரும் ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவி முன்பு காத்திருக்கப் போவது உறுதியாகிவிட்டது.

 

Post a Comment